Friday 23 December 2022
Monday 21 November 2022
RMS T கோட்டத்தின் 31 வது கோட்ட மாநாடு
தோழர்களே! தோழியர்களே!
RMS T கோட்டத்தின் 31 வது கோட்ட மாநாடு 19.11.22 மற்றும் 20.11.22 அன்று திருச்சி அருண் ஹோட்டலில் முன்னாள் T கோட்ட செயலாளரும், முன்னாள் மண்டல செயலாளருமான திரு N.ரங்கராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் திருச்சி மாநகர மேயர் திரு மு.அன்பழகன் அவர்களும், மாநில செயலர் திரு R. முரளி அவர்களும், மத்திய மண்டல செயலாளர் திரு P. பாலசுப்ரமணியம்அவர்களும் சென்னை பிரிப்பக கோட்ட செயலாளர் திரு S. கௌதம் அவர்களும், RMS MA கோட்ட செயலாளர் திரு.L. கண்ணன் அவர்களும், APSO கோட்ட செயலாளர் திரு S.சயத் அலி அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
2022-2024 ஆண்டுக்கான பொறுப்பாளர்கள்:
தலைவர்: K. சந்திரமோகன்
செயலாளர்: S.ரமேஷ் குமார்
பொருளாளர்: K. காதர் இப்ராஹிம்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Monday 31 October 2022
Friday 16 September 2022
Monday 12 September 2022
RMS CB கோட்டத்தின் 33வது கோட்ட மாநாடு
தோழர்களே! தோழியர்களே!
11.09.22 அன்று RMS CB கோட்டத்தின் 33வது கோட்ட மாநாடு மற்றும் நமது சங்கத்தின் ஈரோடு கிளை செயலாளர் திரு. S. அர்ஜூனன் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா Erode Sortingல் கோட்ட தலைவர் திரு. S.சிவகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் 2022-2024 ஆண்டுகளுக்கான
தலைவராக: திரு. S. சிவகுமார்.
செயலாளராக: திரு. V. செந்தில் குமார்.
பொருளாராக: திரு.N. அருண் விக்னேஷ்
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாநாடு மற்றும் பாராட்டு விழாவில் :
நமது முன்னாள் மாநில செயலர் திரு P. குமார் அவர்கள், மாநில செயலர், திரு R. முரளி அவர்கள், மாநில தலைவர் திரு. V. M.சிவகுமார் அவர்கள், மாநில உதவி செயலர் திரு K. ஹேமந்த குமார் அவர்கள், Federal council உறுப்பினர்கள் திரு.K.கனேஷ்ராம் மற்றும் திரு P.ராஜசேகர் அவர்கள், மத்திய மண்டல செயலாளர் திரு. P. பாலசுப்பிரமணியன் அவர்கள், முன்னாள் மத்திய மண்டல செயலாளர் மற்றும் முன்னாள் RMS T கோட்டத்தின் செயலாளர் திரு.N.ரங்கராஜன் அவர்கள் , மற்றும் சென்னை அஞ்சல் பிரிப்பககோட்டச் செயலாளர் திரு. செ. கௌதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .