Saturday 27 January 2018

FNPO தமிழ் மாநில இணைப்புக் குழு சார்பில் வருகிற 08.02.2018 அன்று 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இடைவேளை ஆர்ப்பாட்டம்.


FNPO சம்மேளனம் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போஸ்டல் போர்டுக்கு கடந்த செப்டம்பர் 2017ல் வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்து கடிதம் கொடுத்தது.

தபால் துறையின் கோரிக்கையின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டு போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 7 மாதங்கள் கடந்தும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் மீண்டும் வருகிற 08.02.2018 அன்று 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்தை CPMG அலுவலகத்தில் நடத்துமாறு அறிவித்ததின் அடிப்படையில் வருகிற 08.02.2018 அன்று FNPO சார்பில் CPMG,  அலுவலகத்தில் மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை  இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி அடைய செய்யவும்.

FNPO தமிழ் மாநிலச் செயலர்கள்.




0 comments:

Post a Comment