Tuesday 17 May 2016

தமிழகம் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் ஒரே பள்ளியை சேர்ந்த மாணவியும், மாணவனும் 1195 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்

 
சென்னை, 

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவியும், மாணவனும் முதலிடம் பிடித்து உள்ளனர். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் 4-ந்தேதி முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 6 ஆயிரத்து 650 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 39 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். 

தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.31 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை, டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in,  www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளது. பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் இருவர் முதலிடத்தை பகிர்ந்துக்கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவியும், மாணவனும் முதலிடம் பிடித்து உள்ளனர். மாணவி ஆர்த்தியும், ஜஸ்வந்தும் 1195 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து உள்ளனர். 

மாணவி ஆர்த்தி பெற்ற மதிப்பெண் விபரம்:- 

தமிழ் - 199
ஆங்கிலம் -197
கணிதம் - 200 
இயற்பியல் - 199
வேதியல் - 200
உயிரியல் 200

மொத்தம் - 1195
 

0 comments:

Post a Comment