Saturday 24 March 2018

தோழர் திரு. S.பிரசன்னா, SA, Chennai PSO, அவர்கள் நமது சம்மேளன பொதுச் செயலாளர் திரு. தே. தியாகராஜன், அவர்களுக்கு எழுதிய பணி விடை பாராட்டு கவிதை.


சென்று வா  !

 நான்
தலைவனென்ற
முதல்வன்
நீ ;
ஒரேயொருவனும்
நீ !

என் பாதை
சரிந்த போதும்
சரியான போதும்
என் மீதான
உன் பார்வை
மாறியதேயில்லை !

உடன்பாடில்லா
வேலை நிறுத்தங்களிலும்
ஈடுபட்டது
உன்னொருவனுக்காகவே !

கோபமானவனென
கேள்விப்பட்டிருக்கிறேன்;
வேகமான
மாநிலச் செயலராய் ,
விவேகமான
மாபொதுச்செயலராய்தான்
பார்த்திருக்கிறேன் ...

FNPO- வை ..
கே.ஆர் .,
உருவாக்கினார் .
ஜே.கே.பி.,
மும்முனை பாதையாக்கினார்.
நீயோ
தங்க நாற்கரச் சாலையாக்கியிருக்கிறாய் ..!

 நீயிடுபட்ட
போராட்டக்களம்
பெரிதெனினும்
மிகச்  சிறந்தது
ஆறாம் ஊதியக்குழுவே !


அவ்வளவு
வாங்கியதால்தான்
இவ்வளவுதானா ?
என
இப்போது
கேட்கிறார்கள் .

வீண் போராட்டமென
சலிப்படைகையில்
சும்மா கிடைப்பதல்ல
உரிமைகளென
சுட்டெரிப்பவன்
நீ !

உனக்கென
குரலுயர்த்திப்
பார்த்ததேயில்லை ;
சங்கத்திற்காக
போராடாது
பார்க்காதிருந்ததில்லை.

அடுத்த  தலைமுறை
தொழிற்சங்கவாதிகளுக்கு
நீயோர்
இலக்கணம்.

உனக்கு
பல பக்தர்களிருக்கலாம் ;
நானோ
தூரத்திலிருந்து
ரசிக்கும்
ரசிகன் !

வேகத்தின்
உச்சம்
 நீ ;
பொறுமையின்
உச்சமோ
நாச்சம்மை.

இல்லத்தில்
நாச்சம்மையெனும்
நாதமில்லாவிடின்
நீ
சங்க நாதம்
செய்திருக்க முடியாது.

பணியில்
காதலிப்பது  பெரிது .
காதலியை ,கரம் பிடிப்பதும்
இனியது.
மனைவியோடே
பணி ஒய்வு
பெறுவதோ
மிக மிக மிக  ...அரியது.

அப்பேறு
பெற்றவனே ...
போர்க்களங்கள்
போதுமுனக்கு ...
சென்று வா ..
நினைவில்
நின்று
வாழ்வாய் !


S . பிரசன்னா ,
SA -2 ,
Ch. PSO /1 , Ch.8 .


0 comments:

Post a Comment