Sunday 22 May 2022

FNPO R3 மாநில செயற்குழு கூட்டம் (20.05.2022 - 21.05.2022)

Click here to view Report  

கடந்த மே 20, 21 தேதிகளில்,  தஞ்சையில் நமது FNPO R3  மாநில சங்கத்தின் செயற்குழு கூட்டம்  திரு V.M. சிவகுமார் , அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் 
நமது மாநிலத்தின் அனைத்து கோட்ட செயலாளர்களும் தங்கள் கோட்டங்களில் உள்ள சிக்கல்களை மாநில சங்கத்திடம் தெரிவித்தனர். மாநில சங்கம் அவற்றை விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்தது.

நமது அஞ்சல் துறையில் புதிதாக கொண்டு வரபட்டுள்ள transport policy குறித்தும், one india one parcel குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அதன் பிறகு  மாநில செயலர் திரு R. முரளி அவர்கள் மாநில சங்கத்தின் ஓராண்டு செயல்பாடுகளை, தனி அறிக்கையாக  விவரித்தார்.

மேலும் நமது மாநில சங்கத்தின் துணை தலைவர், தஞ்சாவூர் RMS,  திரு R. ராஜா அவர்கள் வரும் 31.5.22 அன்று பணி ஓய்வு பெற இருப்பதால், அவருக்கு நமது மாநில சங்கத்தின் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. இக்கூட்டத்தில் நமது முன்னாள் மாநில செயலாளர் திரு P. குமார் மற்றும் முன்னாள் மாநில தலைவர் திரு. P.கோகிலவானன் மற்றும் முன்னாள் மாநில துணை செயலாளர்,  RMS T கோட்ட செயலாளர் திரு.N.ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

RMS T கோட்ட தலைவர் திரு. குலோத்துங்கன் அவர்கள் வருகின்ற 31.05.2022 அன்று ஒய்வு பெற இருப்பதால், அவர்களுக்கும் மாநில சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. 

     **R.முரளி**
மாநில செயலர் FNPO R3 தமிழ் மாநிலம்













0 comments:

Post a Comment